ஊர் உறங்கும் வேளையிலே
ஊரை விட்டு உறவை விட்டு வந்த நாட்கள்
பசுமரத்தாணி போல் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே !
காதலித்து தான் பார்ப்போமே என்று
ஆரம்பிக்கும்போது கண்ணில் கண்டதெல்லாம்
கனவிலே வந்து சென்றது !
கனவிலே வந்தது கண்களில் தென்பட்டபோது
காதல் அவள் காலடியில் கிடந்தது !
ஒரு நொடி பார்த்திருப்பாயா என்னை?
அந்தப் பார்வையிலேயே சிக்கி
சின்னாபின்னமாயின நினைவுகள் !
ஆனால் சின்னம் மட்டுமே இப்போது !
எப்போதோ ஒருமுறை வந்து செல்லும்
நிலநடுக்கம் போல வந்து சென்றுவிட்டாள் !
எப்போதும் அவளின் நினைப்பிலேயே இருக்குமாறு
நினைவைக் கொன்றுவிட்டாள் !
அவள் தேடி வந்தேன் இங்கு - ஆனால்
என்னவள் தேடியே தொலைகின்றேன் இன்று !