புதன், 14 ஏப்ரல், 2010

தொலைந்து போகின்றேன்...

ஊர் உறங்கும் வேளையிலே

ஊரை விட்டு உறவை விட்டு வந்த நாட்கள்

பசுமரத்தாணி போல் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே !

காதலித்து தான் பார்ப்போமே என்று

ஆரம்பிக்கும்போது கண்ணில் கண்டதெல்லாம்

கனவிலே வந்து சென்றது !

கனவிலே வந்த‌து கண்களில் தென்பட்டபோது

காதல் அவள் காலடியில் கிடந்தது !

ஒரு நொடி பார்த்திருப்பாயா என்னை?

அந்தப் பார்வையிலேயே சிக்கி

சின்னாபின்னமாயின நினைவுகள் !

ஆனால் சின்னம் மட்டுமே இப்போது !

எப்போதோ ஒருமுறை வந்து செல்லும்

நிலநடுக்கம் போல வந்து சென்றுவிட்டாள் !

எப்போதும் அவளின் நினைப்பிலேயே இருக்குமாறு

நினைவைக் கொன்றுவிட்டாள் !

அவள் தேடி வந்தேன் இங்கு - ஆனால்

என்னவள் தேடியே தொலைகின்றேன் இன்று !