வெள்ளி, 24 அக்டோபர், 2008

நீ!

நீ எனக்கு
எழுதப்படாத கவிதை !
நனையாத மழை !
பேசாத வார்த்தை !
ரசிக்காத ஓவியம் !
வீசாத தென்றல் !
காணாத கனவு !
பரிமாறாத‌ முத்தம் !
நடக்காத‌ பாதை !
எடுக்காத புதையல் !
சிதறாத புன்னகை !
வாழாத ஒரு வாழ்க்கை !

சனி, 11 அக்டோபர், 2008

பச்சோந்தி

மற்றவர் உதவி கேட்கும்போது செவிடன்
அநீதி நடக்கும் இடத்தில் குருடன்
அவலங்களைத் தட்டிக்கேட்கும் போது ஊமை
அநியாயக்காரர்களை துரத்தும் போது முடவன்
எத்தனை வேடங்கள் போட்டாலும்
சமூகத்தின் முன் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதன் !
பச்சோந்தி என்பது விலங்கினங்களிடம் மட்டும்தானோ?

ஞாபகம் வருதே...

எப்போதும் மழை நனையும் போதும்
கடல் பார்க்கும் போதும்
நிலவு ரசிக்கும் போதும்
குழந்தை சிரிக்கும் போதும்
கவிதை வாசிக்கும் போதும்
உன் முகம்தானடி
என் கண் முன்னே வந்து செல்கிறது !
அப்போது வரும் புன்னகையைக்கண்டு
ஏன் என்று கேட்கும் என் மனைவிக்கு
என்ன பதில் சொல்ல?