உன்னை பார்த்த முதல் நாள் நான் உணர்ந்தேன் என் பிறப்பிற்கான அவசியத்தை
எத்தனை முறை உன்னைப் பார்த்த போதும்
என் மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி!
உன்னைப் பார்க்காத போதும் தான்
பார்க்கும் போது மனத்திற்குள்
பார்க்காத போது வெளியில் அலைந்து திரிந்தபடி . . .
உன்னைப் பார்த்து நாட்கள் பல ஆகிவிட்டன
மனது மட்டும் உன் நினைவிலேயே நின்றுகொண்டிருக்கிறது !
இந்த கடிதத்தை படித்து விட்டாவது என் முன்னால் வா !
மற்ற முகங்களை பார்க்க மறுக்கும்
என் கண்களுக்கு சொல்லி விட்டு போ
இப்போது -
உன் கண்கள் பார்ப்பதற்கு வேறொரு கண்கள் உள்ளதென்று
உன் குரலை கேட்பதற்கு மற்றொரு செவிகள் உண்டென்று
உன் மனத்தை கொள்ளை இடுவதற்கு மற்றொரு மனம் உள்ளதென்று
இப்போதாவது என் மனது என்னிடம் திரும்ப வரட்டும்!
இப்போது கடிதத்தை அனுப்புகிறேன்
முகவரி தெரியாத உன் மனதிற்கு...
நான் பார்க்கின்ற பார்வையில் என்னென்னவெல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ, அதையெல்லாம் எழுதுகின்றேன்.
வியாழன், 31 ஜூலை, 2008
புதன், 30 ஜூலை, 2008
என் ஜன்னல் தொட்டுப்போன வண்ணக்கிளி
வியாழன், 17 ஜூலை, 2008
நான் - என்னைப்பற்றி...
நான் பட்டிக்காட்டான். தென்னிந்தியாவில் அதுவும் தென்தமிழகத்தின் தெற்கு மூலையில் ஒன்றான சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அருகில் பிறந்தவன் நான்.
ஒரு அழகான கிரமமும் இல்லாமல் ஆடம்பரமான நகரமும் இல்லாமலிருக்கும் என் சொந்த மண். இந்த மண்ணுடன் பிறந்ததினாலோ என்னவோ அழகாகவும் இல்லை ஆடம்பரமாகவும் இருக்க இயலவில்லை என்னால். பட்டிக்காட்டு பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறேன். அதனாலேயே நான் பட்டிக்காட்டான்..
மண்ணாசை பிடித்தவன், துரியோதனனின் ஆசையல்ல, மண் மீதான மரியாதை, மண் மதிக்கும் மாண்பு
எங்கும் செல்ல விரும்பவில்லை நான் இந்த மண்ணை விட்டு.
உலகத்தை நேசிக்கிறேன், இயற்கையை நேசிக்கிறேன், நிகழ்வுகளை நேசிக்கிறேன், என்னையும் நான் நேசிக்கிறேன்
இங்கு நான் எழுதியிருப்பது அனைத்தும் என் என்ணங்கள் மட்டுமே
பெண்ணைக் காதலிப் பதை விட மண்ணைக் காதலிப்பதே மேல் என்று எண்ணுகிறேன் நான்
நிறைய நாட்களாக என் மனதில் ஒரு வெற்றிடம்
எப்போதுமே வெற்றிடம் தான் இடைவெளி தான் எல்லாவற்றிலுமே
வெற்றிடத்தை நிரப்பக்கி டைத்தது ஓர் ஆயுதம்
ஆயுதத்தை எடுத்துப் பார்க்கையில் வைப்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கிறேன். ஆயுதத்தை எடுத்து சுழற்றும் போதுதான் எத்தனை ஆனந்தம்? உலகமே தெரியாது அனைத்துமே மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தோன்றும். அவ்வப்போது கீறல்கள் ஏற்படுவதும் சகஜம் தான். ஆனால் ஒரு நாள் எனது ஆயுதத்தை தொலைத்துவிட்டேன், தொலைத்து விட்டேனா இல்லை களவு கொடுக்கப்பட்ததா என்பது அந்த ஆயுதததிற்கே வெளிச்சம். மீண்டும் இங்கே வந்து நிரம்பியது வெற்றிடம். எதனாலும் நிரப்ப முடியவில்லை அந்த வெற்றிடத்தை, அனைத்தும் ஆயுதத்தின் கறை படிந்த ரத்தமாய்.
அந்த வெற்றிடம் - என் வாழ்க்கை
அந்த ஆயுதம் - என் காதல்
அந்த கறை படிந்த ரத்தம் - என் காதலி(யி)ன் நினைவுகள்
என் மனத்தில் தோன்றிய அனைத்தையும் எழுதுகிறேன்.
நான் விரும்புவதெல்லாம் ஒரு அங்கீகரீக்கப்பட்ட எழுத்தாளனாக வரவேண்டும் என்பதுதான்.
உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள், எனதாசை நிறைவேற.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)