“என்னை மறந்துவிடு”
நீ சொல்லிய வார்த்தை –
நெரிஞ்சி முள்ளாய் நெஞ்சில் !
மறக்கத்தான் முயற்சிக்கின்றேன்!
ஆனால் –
அடிபட்ட அணில்
ஆத்மார்த்தமான இசை
இரவு நேர வெண்ணிலா
ஈரமான ரோஜா
உண்மை சொல்லும் மழலை
ஊமையான இரவுகள்
எல்லையில்லாக் கடல்
ஏக்கமான நினைவுகள்
ஐந்து விரல் ஸ்பரிசம்
ஒற்றையடிப் பாதை
ஓரக்கண் பார்வை
ஔவையின் சொற்கள்
எது பார்க்கும் போதும்
நீ தானே வந்து செல்கிறாய்
என் நினைவில் !
எதை மறந்து விட்டு
வாழச்சொல்கிறாய் என்னை ?
உயிரை மட்டும் எடுத்து விடு !
வேண்டாம் வேண்டாம் !
இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் !
ஆனால் –
மூளை வேலை செய்யாமல் தடுக்க வேண்டியது
உன் பொறுப்பு !