வியாழன், 16 ஏப்ரல், 2009

மறக்க நினைக்கின்றேன்!

என்னை மறந்துவிடு
நீ சொல்லிய வார்த்தை
நெரிஞ்சி முள்ளாய் நெஞ்சில் !

மறக்கத்தான் முயற்சிக்கின்றேன்!
ஆனால்

அடிபட்ட அணில்
ஆத்மார்த்தமான இசை
இரவு நேர வெண்ணிலா
ஈரமான ரோஜா
உண்மை சொல்லும் மழலை
ஊமையான இரவுகள்
எல்லையில்லாக் கடல்
ஏக்கமான நினைவுகள்
ஐந்து விரல் ஸ்பரிசம்
ஒற்றையடிப் பாதை
ஓரக்கண் பார்வை
ஔவையின் சொற்கள்

எது பார்க்கும் போதும்
நீ தானே வந்து செல்கிறாய்
என் நினைவில் !


எதை மறந்து விட்டு
வாழச்சொல்கிறாய் என்னை ?

உயிரை மட்டும் எடுத்து விடு !

வேண்டாம் வேண்டாம் !

இதய மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் !
ஆனால்
மூளை வேலை செய்யாமல் தடுக்க வேண்டியது
உன் பொறுப்பு !

செவ்வாய், 3 மார்ச், 2009

பிரியா விடை...

நீ இருந்த பொழுதெல்லாம்
நில்லாமல் சென்ற என் மனது
இப்போது நீ இருந்த இடங்களில் எல்லாம்
நின்றே செல்கின்றது
நீ எனக்கு எட்டா தூரம்
மூளை நினைத்தாலும் இதயம் மறுக்கின்றது
அனைத்தும் உணர்ந்துகொண்டு
வெறுமையாய் ஒரு புன்னகை பூக்கையிலே
எக்காளமிட்டு சிரிக்கின்றது நீ அமர்ந்திருந்த இருக்கை!

சனி, 3 ஜனவரி, 2009

கடற்கரை நினைவுகள்

அந்தி வேளை கடற்கரையில்
அலைகளை ரசிக்கும் போதும்
வெட்கத்தினால் சிவந்து கொள்வாய் !
நீயும் கடலும் ஒன்றுதானடி என்று
நான் சொல்லியது போல்
இப்போது சொல்ல முடியவில்லை
முகம் ஏன் சிவந்திருக்கிறது என்று கேட்கும்
என் மனைவியிடம் !

எப்போதும் கைகோர்த்தபடியே நடந்து சென்ற
கடற்கரை வழியே
தனியே நடந்து செல்கின்றேன் !
நீ எங்கே எனக் கேட்கும் அலைகளிடம் சொல்லிவருகிறேன்
இப்போது
நினைவுகளில் மட்டுமே நீ - என்று
நிஜத்தில் தொலைந்து போன நான் !

கடற்கரையில்
உன்னிடம் காட்டிய கவிதைகள் அனைத்தும்
கனவுகளில் கூட வந்து நினைப்பிக்கின்றன !
நாம் அமர்ந்திருந்த இடத்தில்
நீ அமர்ந்திருந்த போது
உன் கணவனுடன் !