வியாழன், 18 செப்டம்பர், 2008

அன்னை

இந்தக் கடவுள்
என் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் !
இல்லையென்றால்
உன்னைப்போல் மிக உயர்ந்த பரிசை
வழங்கியிருப்பானா எனக்கு ?
என் அன்னையாக !

இனியவளே!

என்னடி என் இனியவளே!
கனவு காண கற்றுக் கொடுத்த நீ
என் உறக்கத்தைக் களவாடிச் சென்றுவிட்டாயே !
இது நியாயமா?

வியாழன், 11 செப்டம்பர், 2008

ஜன்னல்

என்னவளே !
ஜன்னல் வழியே எட்டிப்பார்க்காதே மழையை !
உன்னைத் தீண்ட முடியவில்லையே என்ற ஏக்கத்தில்
கண்ணீராய் வழிகிறது மழைத்துளி
ஜன்னலில் !

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

ஞாபகம்

யாருமில்லா கடற்கரை !
வேடிக்கை பார்க்க நிலவும் வானமும் !
கொஞ்சி குலாவிட நண்டுகளின் நடனமும் !
கேட்டு ரசித்திட வண்டுகளின் ரீங்காரமும் !
பார்த்து மகிழ்ந்திட அலைகளின் முயற்சியும் !
நெஞ்சம் சில்லிட வீசும் காற்றும் !
எங்கேயோ தூரத்தில் கேட்கும் மீனவனின் படகு சத்தமும் !
எல்லாவற்றையும் விட மேலாக தூறும் சாரலும் !
ஆனாலும்,
எதையுமே ரசிக்க முடியாமல்
கண்ணை மறைப்பது போல
கடைசியாக உன் கணவனோடு
நான் உன்னைப் பார்த்த ஞாபகங்கள்
இதே கடற்கரையில் !

நான் உன் அடிமை

எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி என்னை வாட்டி வதைக்க ?

சென்ற பிறவியில் வேடனாக இருந்திருப்பாயோ
என் மனதை
வேட்டையாடிச் சென்றுவிட்டாய்
முதல் பார்வையிலேயே !

உன்னைச் சிந்தித்தே என் நாட்கள் நீளுகிறது !
எப்போதாவது வந்து என்னிடம்
பேசி விட்டு போய் விடுகிறாய் - ஆனால்
நீ பேசியவை அனைத்துமே
எனது கவிதை தொகுப்பாய் !

கரை கடக்க முயற்சிக்கிறேன்
ஆனால் புயலாய் என்னை சுருட்டி சுவைத்து விடுகிறாய் !

இரண்டு நாட்களாக காணவில்லை
என் கண்மனியை !
என்ன ஆயிற்றோ எங்கு சென்றாளோ ?
இருப்புக்கொள்ளவில்லை என் மனதிற்கு
எத்தனை முறை அவள் வீடு கடந்து செல்வது ?
யாரிடமும் கேட்கவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஒரு ஆனந்த அவஸ்தை !

நீ நின்று கொண்டிருந்த இடங்களில் எல்லாம்
மணிக்கணக்கில் நின்று செல்கிறது என் மனது !

இன்று வந்துவிட்டாள் என் தேவதை !
உன்னைப் பார்க்கும் முன்னே நத்தையாக நகன்ற நேரம்
உன்னைக்கண்டதும் இறக்கை கட்டிப் பறக்கிறதே !


என்னடி மாயம் செய்கிறாய் என் செல்லமே ?
எப்போதும் உன் நினைவுகளைச் சுமக்கும்
ஒரு சுமையாகவே என் மனது !
சுமை மட்டுமல்ல சுகமான சுமை
எங்கும் சென்று விடாதே என்னிடம் சொல்லாமல் !

என் மனதை மீட்டு விட வேண்டும்
என்ற முயற்சியில் நான் !
எப்படியாவது உன் நினைவுகளின் மயக்கத்திலிருந்து
மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் !
அதுவரை . . .
உன் நினைவுகளின் அடிமை !