அந்தி வேளை கடற்கரையில்
அலைகளை ரசிக்கும் போதும்
வெட்கத்தினால் சிவந்து கொள்வாய் !
நீயும் கடலும் ஒன்றுதானடி என்று
நான் சொல்லியது போல்
இப்போது சொல்ல முடியவில்லை
முகம் ஏன் சிவந்திருக்கிறது என்று கேட்கும்
என் மனைவியிடம் !
எப்போதும் கைகோர்த்தபடியே நடந்து சென்ற
கடற்கரை வழியே
தனியே நடந்து செல்கின்றேன் !
நீ எங்கே எனக் கேட்கும் அலைகளிடம் சொல்லிவருகிறேன்
இப்போது
நினைவுகளில் மட்டுமே நீ - என்று
நிஜத்தில் தொலைந்து போன நான் !
கடற்கரையில்
உன்னிடம் காட்டிய கவிதைகள் அனைத்தும்
கனவுகளில் கூட வந்து நினைப்பிக்கின்றன !
நாம் அமர்ந்திருந்த இடத்தில்
நீ அமர்ந்திருந்த போது
உன் கணவனுடன் !
1 கருத்து:
கவிதை
அழகு.
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
கருத்துரையிடுக