வெள்ளி, 5 செப்டம்பர், 2008

ஞாபகம்

யாருமில்லா கடற்கரை !
வேடிக்கை பார்க்க நிலவும் வானமும் !
கொஞ்சி குலாவிட நண்டுகளின் நடனமும் !
கேட்டு ரசித்திட வண்டுகளின் ரீங்காரமும் !
பார்த்து மகிழ்ந்திட அலைகளின் முயற்சியும் !
நெஞ்சம் சில்லிட வீசும் காற்றும் !
எங்கேயோ தூரத்தில் கேட்கும் மீனவனின் படகு சத்தமும் !
எல்லாவற்றையும் விட மேலாக தூறும் சாரலும் !
ஆனாலும்,
எதையுமே ரசிக்க முடியாமல்
கண்ணை மறைப்பது போல
கடைசியாக உன் கணவனோடு
நான் உன்னைப் பார்த்த ஞாபகங்கள்
இதே கடற்கரையில் !

கருத்துகள் இல்லை: