எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி என்னை வாட்டி வதைக்க ?
சென்ற பிறவியில் வேடனாக இருந்திருப்பாயோ
என் மனதை
வேட்டையாடிச் சென்றுவிட்டாய்
முதல் பார்வையிலேயே !
உன்னைச் சிந்தித்தே என் நாட்கள் நீளுகிறது !
எப்போதாவது வந்து என்னிடம்
பேசி விட்டு போய் விடுகிறாய் - ஆனால்
நீ பேசியவை அனைத்துமே
எனது கவிதை தொகுப்பாய் !
கரை கடக்க முயற்சிக்கிறேன்
ஆனால் புயலாய் என்னை சுருட்டி சுவைத்து விடுகிறாய் !
இரண்டு நாட்களாக காணவில்லை
என் கண்மனியை !
என்ன ஆயிற்றோ எங்கு சென்றாளோ ?
இருப்புக்கொள்ளவில்லை என் மனதிற்கு
எத்தனை முறை அவள் வீடு கடந்து செல்வது ?
யாரிடமும் கேட்கவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஒரு ஆனந்த அவஸ்தை !
நீ நின்று கொண்டிருந்த இடங்களில் எல்லாம்
மணிக்கணக்கில் நின்று செல்கிறது என் மனது !
இன்று வந்துவிட்டாள் என் தேவதை !
உன்னைப் பார்க்கும் முன்னே நத்தையாக நகன்ற நேரம்
உன்னைக்கண்டதும் இறக்கை கட்டிப் பறக்கிறதே !
என்னடி மாயம் செய்கிறாய் என் செல்லமே ?
எப்போதும் உன் நினைவுகளைச் சுமக்கும்
ஒரு சுமையாகவே என் மனது !
சுமை மட்டுமல்ல சுகமான சுமை
எங்கும் சென்று விடாதே என்னிடம் சொல்லாமல் !
என் மனதை மீட்டு விட வேண்டும்
என்ற முயற்சியில் நான் !
எப்படியாவது உன் நினைவுகளின் மயக்கத்திலிருந்து
மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையில் !
அதுவரை . . .
உன் நினைவுகளின் அடிமை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக