செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

காரணம்

என் மேல் விழுந்து கொண்டு
என்னை விடுடா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

ஏதோ ஓர் அடிப்பட்ட அணிலுக்காக
கடவுளிடம் சண்டையிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எனக்கு தாகம் எடுக்கும்போது
நீ தண்ணீர் குடிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எனக்கு பிடித்த பாடல்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது
எங்கிருந்தாலும் எனக்கு தெரிவிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

சற்றும் எதிர்பாராத வேளையில் வந்து
என் வீட்டு கதவு தட்டுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

இரவு முழுவதும் உன் அழைப்புக்காக காத்திருப்பேன்
காலையில் வந்து சாரிடா தூங்கிட்டேன் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கோவிலுக்கு செல்லும்போது கூட
என்னை குழந்தை போல் அலங்கரிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை முத்தமிடும்
என் அக்காவின் குழந்தையை
உனக்கு போட்டியாக எண்ணுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன்னை பெயர் சொல்லி அழைக்கும் போது
திரும்பாமலேயே இருந்து விட்டு
மூன்று முறை அழைத்த பின்
இதற்காக தான் திரும்பவில்லை என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை கண்ணா என்று அழைத்து
ராமனாக இருடா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உனக்கு பிடித்த என் நீலக்கலர் சட்டையை
எப்போதுமே அணிந்து கொள்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை ஏன் காதலிக்கிறாய்
என்று நான் கேட்டால்
அதாண்டா ஏமாந்துட்டேன் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எப்போதும் அலுவலகத்திற்கு செல்லும்போது
உன் நெற்றிப் பொட்டால் எனக்கு திலகமிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன் அப்பாவுக்கு சட்டை எடுக்கும்போது கூட
என்னை தேர்ந்தெடுக்க சொல்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கள்ளிக் காட்டு இதிகாசத்தின்
ஒரு வரியை நான் சொல்ல அடுத்த வரியை
நீயே விவரிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் உறங்க ஆரம்பிக்கும்போது
என் நெற்றியில் முத்தமிட்டு செல்வாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை தூங்க வைக்க வேண்டுமென்று
சொல்லிக்கொண்டே தூங்கிவிடுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

கடை வீதிக்கு உன் அம்மாவுடன் வரும்போதும்
என் அம்மாவை பார்த்து கண்களாலே புன்னகைப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என் அம்மா அப்பாவை
நம்ம அம்மா அப்பா என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உன்னை குழந்தையாக மாதிரி
தூக்கி கொஞ்சவேண்டும் என்று சொல்லி
மடியில் வைத்து கொஞ்சுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை முதன் முதலில் நண்பனுக்கும் மேலானவன்
என்று உன் வீட்டில் அறிமுகம் செய்து வைத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

உனக்கு பிடிக்காதென்றாலும்
கல்லூரியில் நான் பாடிய பாடல் என்பதால் ரசிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

அடுத்த பெண்ணைப் பற்றி விசாரிக்கையில்
பொய் கோபத்துடன் கிள்ளுவயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் முதன் முதலில் தொட்ட
உன் வலது கைதான் பிடிக்கும் என்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் தாகமாயிருக்கு என்று சொல்லும்போது
நீ தண்ணீர் குடிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

பேசிக்கொண்டே இருந்த எனக்கு
உன் மௌன மொழியை கற்றுக்கொடுத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

எப்போதும் என்னை சந்திக்கும்போது
என் தோள் சாய்ந்து கண் மூடுவயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

வண்டியில் செல்கையிலே
பார்த்துப் போடா என்று
செல்லமாக குட்டுவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் சமைக்க ஆரம்பித்தவுடன்
எனக்கு கட்டளைகள் இட ஆரம்பிப்பாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நான் உன் வீட்டு தொலைபேசியில்
ஐ லவ் யூ என்று சொல்லும்போது
நானும் தான் என்று வழிவாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

என்னை ஏன் காதலிக்கிறாய்
என்று கேட்டு என்னை
இத்தனை எழுத வைத்தாயே
அதனால்தானடி உன்னைக் காதலிக்கிறேன் !

நம்மை பெற்றவர்களை நம் காதல்
அழவைக்க கூடாது என்பதால்
நாம் பிரிந்து விடுவோம்
என்று சொன்னாயே நம் கடைசி சந்திப்பின் போது
அதனால் தானடி உன்னை நான் இன்னும் காதலிக்கிறேன் !

2 கருத்துகள்:

பூபதி ராஜா சொன்னது…

பட்டிக்காட்டானுக்கு எனது வாழ்த்துக்கள் .....

பெயரில்லா சொன்னது…

Superb,,,Keep it up