சனி, 2 ஆகஸ்ட், 2008

திருப்பிக்கொடு

எனக்கும் உனக்கும்
இனி ஒன்றுமில்லை என்ற என் கண்மணியே !
நான் உன் கணவனில்லை -
உன் சரீரத்தை நீயே வைத்துக்கொள்!
நான் உன் காதலனில்லை -
உன் இதயத்தை நீயே வைத்துக்கொள்!
நான் உன் நண்பனில்லை -
உன் புன்னகையை நீயே வைத்துக்கொள்!
ஆனாலும்,
நான் நான் தான் . .
என்னை மட்டும்
எனக்கு திருப்பிக்கொடுத்துவிடு !
இனிமேலாவது நான் நானாக இருப்பதற்காக. . .

கருத்துகள் இல்லை: