நான் நனைய சென்ற போது
நின்று போன மழை . . .
கை நீட்டுகையில்
தீர்ந்து போனகோவில் பிரசாதம். . .
காக்கவிரைந்த போது
அணைந்து போன மெழுகுவர்த்தி. . .
பேசமுனைந்த போது
அடுத்தவரின் தொலைபேசி அழைப்பு. . .
இவையெல்லாம் எச்சரிக்கை மணிகளோ
நான் மணமுடிக்க நினைந்தபோது
மணமகனுடன்
என் காதலி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக