ஆகஸ்டு 6, 1945
ஹிரோஷீமா நாசாமக்கப்பட்ட நாள் !
புல் பூண்டு கூட மிஞ்சவில்லை
உடைந்தது மட்டுமல்ல,
ஊருக்குலைந்தும் போனது ஜப்பான் !
அனைத்தும் புதிதாய் தொடங்கப்பட்டது பூஜ்ஜியத்திலிருந்து !
இப்போது,
கோடிகளை தொட்ட, வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று !
ஆகஸ்டு 15, 1947
இந்தியா சுதந்திரம் அடைந்த நாள்
அறுபத் தியொரு ஆண்டுகள் ஓடிவிட்டன.
இப்போதும் நாம்
மற்ற நாடுககளிடம் கையேந்தியபடி !
ஏன் இத்தனை வித்தியாசம் ?
என்ன இல்லை நம்மிடத்தில் ?
கஷ்டப்பட்டு பெறப்பட்ட சுதந்திரம்
காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார் !
அப்துல் கலாமின் கனவு கனவாகவே ஆகிவிடுமோ ?
எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ?
ஏன் நமது ஒவ்வொரு அடியும்
நாட்டின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைக்கப்படவில்லை ?
இன்னும் எத்தனை நாட்கள்
வெளிநாட்டு வேலைக்கு மோகம் கொண்டு அலையப் போகிறார்கள்
நம் இளைஞர்கள் ?
சுய முன்னேற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும்
வளர்ச்சி போதவில்லை !
எதற்காக இன்னும்
அடுத்தவனை பார்த்தே சூடு போட்டுக்கொள்ள வேண்டும்?
என்ன இல்லை இங்கே ?
ஏன் போகவேண்டும் கடல்கடந்து ?
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு
நமக்கு நாமே பதிலளிக்க பழகுவோம்,
இப்போதாவது சபதம் எடுப்போம்
நமது பாரதத்திற்காகவே பாடுபடுவோம் என்று!
நாம் அனைவரும் சுய நலவாதிகள் தான்,
சுய நலத்தை கொஞ்சம் பெரியதக்கிக் கொள்வோம்
என் வீடு என் நிலம் என் பணம்
என்று நினைப்பதை மறந்துவிட்டு,
என் நாடு என் மக்கள்
இந்த நாட்டின் முன்னேற்றம் என் முன்னேற்றம்
என்ற நினைப்பை உருவாக்குவோம் !
நாம் கண்டுபிடித்த அறிவியலை -
முதலில் நமக்கு பயன் படுத்துவோம்,
இப்போது சுய நாலாவதியாய் இருப்போம் !
வளர்ந்து செல்வோம் வானை முட்டுமளவிற்கு !
வானம் தலையில் தட்டும்போதும் குனிந்து விட வேண்டாம் !
உயரே தள்ளிவிடுவோம் வானத்தை,
கனவு காணுவோம் சாதனை படைப்போம் !
1 கருத்து:
very nice poem, keep trying to say some thing beter then last poem
கருத்துரையிடுக