வியாழன், 7 ஆகஸ்ட், 2008

சுதந்திர போராட்டம்

எங்களுக்கு வேண்டாம் காந்தி பெற்றுக் கொடுத்த
அஹிம்சை சுதந்திரம் !

ரத்தம் சிந்தாமல் பெற்றதனாலோ என்னவோ
இப்போது வாரமொறு முறை என் மக்கள் ரத்தம் சிந்துகிறார்கள் !

மடிந்து விடாமல் கிடைத்ததனாலோ என்னவோ
மனம் மரத்துக் கிடக்கிறது என் மக்களுக்கு,

வாரம் ஒரு குண்டு வெடிப்பு
தினம் ஒரு கொலை கற்பழிப்பு
மணிக்கு ஒரு கொள்ளை. . .

வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்
மாதமொரு முறை வாக்குறுதி அதை நம்பிய ஏமாற்றம் 1

இலவசங்களுக்காக ஏழையாகும் பணக்கார மக்கள்
கணிக்க முடியாத விலை வாசி !

நினைத்து பார்க்க இயலாத அளவில் கல்விக்கட்டணம்
திரும்பிய பக்கமெல்லாம் பிச்சை கேட்கும் குழந்தைகள்

ஏமாற்றும் ஏமாறும் மக்கள்

வாக்குறுதியை மட்டுமே தரும் அரசியல்வாதி
அவனையும் நம்பி மறுமுறையும் ஜெயிக்க வைக்கும் குடிமக்கள்,

பாராளுமன்திறத்தில் பணத்தை கொட்டும் MP
அவனையும் MP ஆக வைத்திருக்கும் ஒரு கட்சி !

உள்நாட்டு கலவரத்தை அடக்க முடியாமல்
அணு ஆயுத ஒப்பந்தம் வேண்டும் ஒரு அரசாங்கம்!

அனைத்தையுமே இலவசமாக்கி,
மக்களை முழு சோம்பேறியாக மாற்றுகிற மாநில அரசுகள் !

சமயம் பார்த்து காலை வாரும் கூட்டணி !
பணம் பதவி புகழ் இதற்காகவே அலைகிற தலைவர்கள் !

ஒடுக்கப்படுகிற மீடியாக்கள்
சமயம் வரும்போது இரட்டை வேடம் போடும் மீடியாக்கள் !

வேண்டாதவன் நல்லதே செய்தாலும்
வேண்டாமென மறுக்கும் மகாத்மாக்கள் !

எவ்வளவு தூரம் ஏய்க்க முடியுமோ
அவ்வளவு தூரம் அரசை ஏமாற்றும் தொழில் அதிபர்கள் !

எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும்
மாணவர்கள் இளய சமுதாயங்கள் !

போட்டியில் கலந்துகொள்ளாமல் ஓய்வு கேட்டுவிட்டு
24 மணிநேரமும் பணத்திற்காக
விளம்பரம் நடிக்கும் விளையாட்டு வீரர்கள் !

கைப்பொம்மையாக இருக்கும் காவலர் பிரிவு !
இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத மக்கள் !

ஒட்டளிக்க வராமல்
காரணம் சொல்லும் படித்த முட்டாள்கள் !

தண்ணீருக்கு சொந்தம் கொண்டாடும்
ஈவிரக்கமற்ற அரசாங்கங்கள் !

ஏன் செய்கிறோம் எதற்காக செய்கிறோம்
என்றே உணராத சினிமா ரசிகர்கள் !

எவன் எக்கேடு கேட்டுப் போனால் எனக்கென்ன
என்று ஊர் மேயும் குடிகாரர்கள் !

விளையாட்டை யுத்தமாகவும்
யுத்தங்களை விளையாட்டாகவும் பார்க்கும் பாமரர்கள் !

சோறு போடும் விவசாயிக்கு
கடன் அட்டை கொடுக்கிறோம் !
கொடுத்த கடனை தேர்தலை முன்னிட்டு
தள்ளுபபடியும் செய்கிறோம் !

எண்ணை நாடுகளுக்கு
கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கிறோம் !

உலகத்திற்கு பூஜ்ஜியததை அறிமுகம் செய்த
ஆரியபட்டனை மறந்துவிட்டோம் !
அவன் ஒரு இந்தியன் என்பதயும் மறந்து விட்டோம் !

நாம் உருவாக்கும் அறிவுப் புதயல்களை
அந்நியனுக்கு விற்றுவிடுகிறோம் !

வேற்றுமையில் ஒற்றுமை என்று முழங்கிக்கொண்டே
மற்ற இனத்தவரை வெறுத்து ஒதுக்குக்கிறோம் !

ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே
இட ஒதுக்கீடுகளை வரவேற்கிறோம் !

உலக நாடுககளிடம் சென்று
கையேந்தி நிற்கிறோம் அறிவியலுக்கு !

இப்போது நினைத்து பார்க்க தோன்றுகிறது
நாம் சுதந்திரம் அடையமலேயே இருந்திருந்தால் ?

ஒரு பயனும் இல்லை நாம் சுதந்திரம் அடைந்தும்
இப்போது நாம் ஆரம்பிக்க வேண்டியது
இரண்டாம் விடுதலைப் போர் -

அஹிம்சை வழி எங்களுக்கு வேண்டாம்
இம்சையின் வலியும் எங்களுக்கு தெரியும்

இப்போது நம்மை ஆட்கொள்ளுவது
ஆங்கிலேயன் அல்ல,
அவன் கற்றுக் கொடுத்த பேராசை !
பேராசையும் பெயரசையும் கொண்ட மனிதர்கள் !

விடுதலை கேட்போம்
இல்லை இல்லை விடுதலை பெறுவோம்
இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்து !

சமுதாயத்தை புரட்டிப் போட்டு
புதிய சமுதாயம் படைப்போம்

எடுத்து வைப்போம் முதல் அடியையே பேரிடியாய்

சமுதாய கோபங்களுக்கு நியாயம் கேட்போம்
அநீதியைக் கண்டால் அடித்து நொறுக்குவோம்

எல்லோரும் ஓட்டளிப்போம்
ஒதுக்கி விடுவோம் உபயோகமில்லாத அரசியல்வாதிகளை
இலவசங்களை மறுப்போம்

எங்களுக்கு மீன் வேண்டாம்
மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள் என கேட்போம்

குழந்தைகளை பள்ளிக்கு மட்டுமே அனுப்புவோம்
உண்மை விளம்புவோம்
உரிமைக்கு குரல் கொடுப்போம்
அனைவரும் வரி கட்டுவோம்
கற்போம் கற்பிப்போம்

பழயான கழிதலும் புதியன புகுதலும் என்று
ஒரு போகி கொண்டாடி விடுவோம்
இந்த பழய சமுதாயத்திற்கு

எல்லாவற்றிற்கும் மேலாய் மனிதம் வளர்ப்போம்

இது சாத்தியமில்லாமல் இல்லை

அனைத்து கைகளும் ஒன்று சேர்ந்தால்
நிலவயும் பூமிக்கு இழுத்து விடலாம்

நமது அடுத்த தலைமுறை வாழட்டும்
நாம் பெற்றுக் கொடுத்த புதிய சுதந்திர பூமியில் !

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

please cool...cool...cool